Thursday, June 19, 2008

உங்கள் விருப்பபட்ட உணவுகளை 'ஆர்டர்' செய்ய www.eatyourheartout.ae



அமீரகத்தில் உங்கள் விருப்பபட்ட உணவுகளை 'ஆர்டர்' செய்ய www.eatyourheartout.ae இணையதளம்





ஈட் யிவர் ஹாட் அவ்ட் என்ற இணைய தளம் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு அரபு அமீரகத்தில் ஆரம்பிக்க பட்டது, இந்த இணையத்தளம் தனது ஒரு ஆண்டை கடந்து இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்க இருக்கிறது, இதன் மூலம் அமீரகத்தில் வசிக்கும் கம்ப்யூட்டர் பயனாளர்கள் பலர் பயன் அடைந்து உள்ளார்கள் ,இதன் சிறப்பு என்னவென்றல் 'ஆர்டர்' செய்தவுடன் உங்கள் இருப்பிடம் தேடி உணவுகள் டெலிவரி செய்ய படும் ,மேலும் அமீரத்தில் உள்ள தரமான அனைத்து வகையான உணவு விடுதிகளும் இடம்பெறுகிறது,உலகில் உள்ள அனைத்து வகையான உணவு வகைகளும் இந்த இணையத்தளத்தில் இடம்பெற்றுள்ளது .

ராயல்டி பாயின்ட் திட்டம்

விரைவில் ராயல்டி பாயிண்ட் திட்டம் கொண்டு வர ஏற்பாடு செய்யப்படும் என்று இந்த போர்டலின் CEO மிஸ் தீடா சொல்கிறார் , மேலும் அவர் கூறியதாவது எங்கள் போர்ட்டல் பயனாளர்களை ஊக்கிவிக்கும் பொருட்டு அதிகளவில் பயன்படுத்தும் பயனாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு ரிவார்ட்ஸ் வழங்க இருக்கிறது.

Tuesday, May 20, 2008

எம்.எஸ்.வேர்டு: சில உபயோகமான டிப்ஸ்...

எம்.எஸ்.வேர்டு: சில உபயோகமான டிப்ஸ்...
1
2
மைக்ரோசாஃப்ட் வேர்டு என்பதை கணினியை உபயோகிக்கும் அனைவரும் அறிந்திருப்பர். என்றாலும் சில ஷார்ட்கட்களை பயன்படுத்து பணிகளை சுளுவாக முடிக்க வேண்டுமானால் கீழ்க்கண்ட் டிப்ஸ்களை உபயோகிக்கவும்.

எம்.எஸ். வேர்டில் புல்லட் குறிகளை உருவாக்க ஃபார்மேட் மெனுவிற்கு செல்ல வேண்டிய தேவையில்லை, மேலும் பிரதியைத் தேர்வு செய்து ரைட் கிளிக்கும் செய்ய வேண்டியதில்லை. தேவையான பகுதியை தேர்வு செய்து கன்ட்ரோல்+ஷிஃப்ட்+எல் அழுத்தினால் போதுமானது. புல்லெட் குறிகளை நீக்க வேண்டுமானால் கன்ட்ரோல்+ஷிஃப்ட்+என் அழுத்தவும்.

பிரதியை மையப்படுத்த மவுஸ் தேவையில்லை. கன்ட்ரோல்+ஈ-யை அழுத்தினால் போதுமானது.

வார்த்தைகளுக்கு இடையே பெரிய டேஷ் மற்றும் சிறிய டேஷ் நுழைக்க: சிம்பல் மெனுவிலிருந்து டேஷ்-ஐ எடுத்து நுழைக்க நேரம் செலவாகிறதா? விசைப்பலகையில் உள்ள "ஆல்ட்" பொத்தானை அழுத்தியபடி 0151 என்று டைப் செய்தால் பெரிய டேஷும், ஆல்ட் அழுத்திக்கொண்டே 0150 என்று டைப் செய்தால் சிறிய டேஷும் தானாகவே வரும். இதனை பயன்படுத்த நம்பர் லாக் ஆன் செய்யப்பட்டிருக்கவேண்டும்.

வேர்ட் 2007-ல் ஸ்க்ரீன் டிப்ஸை மறைக்க: சிலருக்கு ஸ்க்ரீன் டிப்ஸ் எரிச்சலை ஏற்படுத்தலாம். ஆஃபீஸ் பொத்தான் மெனுவை கிளிக் செய்க பிறகு வேர்ட் ஆப்ஷனுக்கு செல்க. இப்போது திறக்கும் பெட்டியில் பாப்புலர் என்பதை தேர்வு செய்க. ஸ்க்ரீன் ஸ்டைல் ட்ராப் டவுனில் டோன்ட் ஷோ ஸ்க்ரீன் டிப்ஸ் என்பதை தேர்வு செய்து ஓ.கே கிளிக் செய்யவும்.

வேர்ட்- 2007ல் வார்த்தைக் களஞ்சியத்தை பயன்படுத்த: ரிவியூ டேபிளிலிருந்து தெசாரஸ் என்பதை தேர்வு செய்க. விசைப்பலகையில் உள்ள ஆல்ட் பொத்தானை அமுக்கியபடி, எந்த வார்த்தைக்கு மாற்று வார்த்தைகள் தேவையோ அதனை செலெக்ட் செய்க.

முடிவுகள் ரிசர்ச் டாஸ்க் சில்லில் தோன்றும். இதில் உங்களுக்கு தேவையான வார்த்தையைக் கொண்டுவர அதன் மீது கர்சரை வைத்து கீழ் நோக்கிய அம்புக் குறியை விசைப்பலகையில் தட்டவும், பிறகு இன்சர்ட் என்பதை தேர்வு செய்யவும்.

பணி இடத்திலிருந்து ரூலர் என்பதை அகற்ற: டைப் அடித்த பிரதியை ஒழுங்குபடுத்தவும் வரிசைக்கிரமப்படுத்தவும் உதவும் கருவி ரூலர். இது வேண்டாம் என்றால் வியூ மெனுவிற்குச் சென்று ரூலர் என்பதை கிளிக் செய்தால் அது மறைந்து விடும். பிறகு அதை மீண்டும் கிளிக் செய்தால் பயன்பாட்டிற்கு வந்து விடும்.

உங்கள் பிரதியில் இமேஜ் சேர்க்க வேண்டுமா? : இன்சர்ட் சென்று செலெக்ட் பிக்சர் செய்யவும், பிறகு கோப்பிலிருந்து இமேஜை எடுக்கவும் அதனைத் தேர்வு செய்து இன்சர்ட் என்பதை கிளிக் செய்யவும்.
1
2

Wednesday, May 7, 2008

இந்தியாவில் ஐஃபோன்: ஆப்பிள்-வோடஃபோன் ஒப்பந்தம்

Apple - iPhone
டெல்லி: இந்தியாவில் ஐஃபோன்களை விற்க முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான ஆப்பிளுடன் வோடஃபோன் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த வோடஃபோன் நிறுவனம் இந்தியா உள்பட பல்வேறு உலக நாடுகளில் செல்ஃபோன் சேவையை வழங்கி வருகிறது. இந்த நிலையில் இந்தியா உள்பட 9 நாடுகளில் தனது வாடிக்கையாளர்களுக்கு அதிநவீன ஐஃபோன் சேவையை வழங்க திட்டமிட்டுள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா, ஆஸ்திரேலியா, செக் குடியரசு, எகிப்து, கிரீஸ், இத்தாலி, போர்ச்சுகல், நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, துருக்கி ஆகிய நாடுகளில் உள்ள வோடஃபோன் வாடிக்கையாளர்கள் ஐஃபோன் சேவையை பெறுவார்கள் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐஃபோன் என்பது எச்டிஎம்எல் இ-மெயில் மற்றும் பிரவுசிங் வசதி கொண்ட மொபைல் ஃபோன். இதன்மூலம் இன்டர்நெட்டில் அநாயாசமாக பிரவுஸ் செய்யலாம்.

உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள புக் மார்க்குகளை தானாகவே சின்கரனைஸ் செய்யும் வசதிகூட உண்டு. கூகுள், யாகூ சர்ச் இன்ஜின்கள் இன்பில்ட்டாக உள்ளது.

வயர்லெஸ் கனெக்ஷ்ன் மூலம் செய்திகள் அல்லது படங்களை இ-மெயிலில் அனுப்பிக் கொண்டிருக்கும்போதே தொலைபேசியிலும் பேசமுடியும். ஒரேநேரத்தில் பல இயக்கங்களை செய்யக்கூடியது ஐஃபோன்.

இந்தியாவில் ஐஃபோன்களை விற்பதற்கு முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான ஆப்பிளுடன் வோடஃபோன் ஒப்பந்தம் செய்துள்ளது.

Tuesday, April 29, 2008

அதீத வளர்ச்சியை நோக்கி ஆன்லைன் விளம்பரங்கள்

12
இணையதள பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 5 கோடியையும் தாண்டிவிட்ட நிலையில், இணையதள வங்கி நடவடிக்கைகள் நாளுக்கு நாள் பெருகிவந்த போதிலும், ஆன்லைன் விளம்பர வருவாயோ நோஞ்சானாக உள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
ஆனால் தற்போது ரூ.250 கோடி சந்தையாக உள்ள ஆன் லைன் விளம்பரச்சந்தை 2011-ம் ஆண்டில் 10 மடங்கு அளவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது சுற்றுலாத் துறைக்கு அடுத்தபடியாக ஆன் லைன் விளம்பரங்களுக்காக அதிகம் செலவு செய்யும் துறைகள் வங்கி, நிதி, சேவைகள் மற்றும் காப்பீட்டுத் துறை ஆகிய நிதி தொடர்பான நிறுவனங்களே.
மும்பையில் உள்ள முன்னணி தேடல் எந்திர மார்க்கெட்டிங் நிறுவனம் ஒன்றின் நிர்வாக இயக்குனர் இதுகுறித்து கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாக வங்கி, நிதி, சேவைகள் மற்றும் காப்பீட்டுத் துறைகள் அடங்கிய பி.எஃப்.எஸ்.ஐ துறைகள் ஆன்லைன் விளம்பரச் செலவுகளை அதிகரித்து வருவது தெரிய வந்துள்ளது.
முன்பெல்லாம் காப்பீடு முகவர் மூலம் நடந்து வந்த பாலிசி விற்பனைகள் தற்போது காப்பீடு நிறுவனங்களின் ஆன்லைன் விளம்பர பேனர்கள் மூலமே அதிகம் நடைபெறுவதாக அவர் தெரிவிக்கிறார்.
தேடல் எந்திரங்களில் காப்பீட்டு நிறுவனங்களுக்கு விழும் கிளிக் எண்ணிக்கைகள் கடுமையாக அதிகரித்துள்ளதாகவும் தெரிகிறது.
அவிவா காப்பீட்டு நிறுவனம் தனது விளம்பரச் செலவுகளில் 5 சதவீதத்தை ஆன்லைன் விளம்பரங்களுக்காக செலவு செய்வதாக அந்த நிறுவனத்தின் இணை இயக்குனர் விஷால் குப்தா தெரிவித்துள்ளார்.
கார்ப்பரேட் ஊழியர்கள் தங்கள் நிதி சார்ந்த நடவடிக்கைகள் அனைத்தையும் இணைய தளங்கள் மூலமே செய்து வருவதால், ஆன் -லைன் மட்டுமல்லாது எந்த ஒரு டிஜிட்டல் மீடியாவிலும் விளம்பரங்களைக் கொடுக்க நிதி சார்ந்த நிறுவனங்கள் தயங்குவதில்லை.
மேலும் இணையதள விளம்பரங்கள் மூலம் இந்த நிதிச்சேவை, காப்பீட்டு, வங்கிகளின் வர்த்தக வருவாய் 100 முதல் 150 சதவீதம் அதிகரித்துள்ளது.
செலவுகளும் இதனால் குறைவதால் இதன் வளர்ச்சி வரும் ஆண்டுகளில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய வலைப்பதிவாளர்களுக்கான டிப்ஸ்


12
இணையதளம்
'பிளாக்ஸ்' (Blogs)... இணையதளத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அதிகம் பரிச்சயமான ஆங்கிலவார்த்தை இது. யார் வேண்டுமானாலும் தங்களுக்கென ஒரு Blog-ஐ (வலைப்பதிவுத்தளம்) உருவாக்கிக் கொள்ளலாம்.
உலகம் முழுதும் பல லட்சம் பேர் வலைப்பதிவுகளில் தீவிரமாக எழுதி வருகின்றனர். இதில் உங்கள் எழுத்துக்களுக்கான வாசகர்களை தக்கவைப்பது சற்று கடினமான காரியம் தான்.
சிலருக்கு எழுதுவது என்றால் பிடிக்கும். இதன் காரணமாக வீட்டில் டைரி எழுதுவதற்கு பதிலாக வலைத்தளத்தை பயன்படுத்துகின்றனர். இவர்களுக்கென்று ஒரு தனி வாசகர்(கள்) வட்டம்.
நீங்கள் பிரபலமானவராக இருந்தால், உங்கள் வலைத்தளத்தில் பாட்டி வடை சுட்ட கதையை எழுதினால் கூட நிறைய பேர் வந்து படிப்பார்கள். உங்களை யாரென்றே தெரியாத போது நீங்கள் அர்த்தமுள்ள விஷயங்களை படு ஆழமாக அலசினாலும் கண்டுகொள்ள மாட்டார்கள்.
எழுதுவதற்கு முன் ஒரு சிறிய ஆராய்ச்சியை மேற்கொண்டால் நீங்கள் சொல்ல வருவதை ஏற்கன்வே பலர் கூறியிருப்பார்கள் என்பதை அறியலாம். யார் வேண்டுமானாலும் எழுதலாம் என்றாகிவிட்ட பிறகு மோசமான எழுத்துக்களும் வலைப்பதிவுத் தளங்களில் தற்போது குப்பை லாரி போல் குவிந்து வருகிறது.
ஆன்லைனில் கிடக்கும் விஷயதாரங்களில் உங்கள் எழுத்திற்கென்று ஒரு பிரத்யேக கும்பலை திரட்டுவது என்பது கடினம்தான். இருப்பினும் கீழ்வரும் டிப்ஸ்களை நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம்:
1. எதைப்பற்றி சொல்ல வருகிறீர்கள் என்பதை விளக்கமாக கூறி விட வேண்டும். உங்கள் சொந்த வாழ்க்கையின் சிறுசிறு தகவல்களை எல்லோரும் விரும்பிப் படிப்பார்கள் என்று கூற முடியாது. உங்களுக்கு அது சுவையாக தெரியலாம். ஆனால் வாசகர்கள் உங்களைப் பற்றிய சொந்த விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை.
எனவே பலதரப்பட்ட விஷயங்கள் பற்றியும் தனிச் சிறப்பாக உங்களுக்கு ஏதாவது தெரிந்திருந்தால் அதை புரியும் படியாக முதலில் எழுத வேண்டும். உங்கள் எல்லை எது என்பதை முதலில் தெளிவாக குறிப்பிட்டு அதனை விடாமல் கடைபிடிக்க வேண்டும்.
2. உங்களுக்கு ஆர்வமுள்ள துறையில் அனைத்து விவரங்களையும் உங்கள் விரல் நுனியில் வைத்திருப்பது அவசியம். மேற்கோள் காட்டும்போதும், புள்ளி விவரங்களை அளிக்கும்போதும் அதனை எங்கிருந்து பெற்றீர்கள் என்பதை குறிப்பிடுவதால் உங்கள் வலைத்தளத்திற்கு நம்பகத்தன்மை கூடும். சீரான வலைப்பதிவாளர் என்ற பெயரை வாசகர்களிடையே உருவாக்க உங்களின் அறிவுத் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

உலகின் மிகச்சிறிய கணினி அறிமுகம்


உலகின் மிகச்சிறிய தனிநபர் கணினியை (personal computer), தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்புத் துறைக்கான தீர்வைகளை வழங்கி வரும் ஜப்பான் நிறுவனமான புஜிட்சு (Fujitsu) அறிமுகப்படுத்தி உள்ளது.
பெங்களூருவில் நடந்த விழாவில் புஜிட்சு நிறுவனத்தின் இணை இயக்குனர் இவான் கம், இந்த சிறிய கணினியை அறிமுகப்படுத்தினார்.
63 கிராம் மட்டுமே எடையுள்ள இந்த நவீன தனிநபர் கணினியில், 3.5 ஜி மொபைல் பிராட்பேண்ட் (3.5 G mobile broadband) தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடியும் என்பது கூடுதல் சிறப்பம்சமாக கருதப்படுகிறது.
அடிக்கடி பயணம் மேற்கொள்பவர்கள் தங்களது தனிநபர் கணினி மற்றும் மடிக்கணினிகளை சுமந்து செல்வதில் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டதை தொடர்ந்து, மிகச் சிறிய அளவில், பயணத்தின் போது எளிதில் கொண்டு செல்லக்கூடிய வகையில், இந்த சிறிய கணினியை வடிவமைத்துள்ளதாக புஜிட்சு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன் விலை ரூ.60 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரத்திற்குள் இருக்கும் என அதில் கூறப்பட்டுள்ளது.

விரைவில் வருகிறது பேசும் கம்ப்யூட்டர்

மனிதர்களுடன் நேரடியாகப் பேசக்கூடிய புதிய கம்ப்யூட்டர்கள் விரைவில் வெளிவர உள்ளன.
மனிதர்களின் குரல் ஏற்றஇறக்கங்கள், முகபாவனைகளை உணர்ந்து அதற்கேற்ப சிக்னல்களின் அடிப்படையில் விஞ்ஞானிகள் பேசும் கணினிகளை உருவாக்கி வருவதாக தெரிய வந்துள்ளது.
பெல்பாஸ்ட் நகரில் குயின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் சென்சிடிவிவ் ஆர்டிபிசியல் லிசனர் சிஸ்டம் என்ற பெயரில் இந்த கணினியை வடிவமைத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய திட்டமான சீமெய்ன்-ன் ஒரு பகுதியாக இந்த பேசும் கணினி உருவாக்கப்படுகிறது.
குரல், முகபாவனைகளுக்கு ஏற்ப அந்தக் கணினி சம்பந்தப்பட்ட நபருடன் விவாதத்தில் ஈடுபடும். கணினி பயனரின் பல்வேறு நடத்தைகளுக்கு ஏற்ப அந்தக் கணினி செயலாற்றும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு பரிமாணங்களில் நாம் பேசுவது, எந்தமாதிரியான பேச்சுகள் சுவாரசியமானவை, எவை அலுப்புத் தட்டுபவை போன்ற அனைத்து பாவனைகளும் கணினி உணர்ந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்படுவதாகத் தெரிகிறது.

Friday, March 28, 2008

ஆசை காட்டி மோசம் செய்யும் வைரஸ்கள்

ஆசை காட்டி மோசம் செய்யும் வைரஸ்கள்
1
2
போர்னோ சமாச்சாரம், இலவச சாஃப்ட்வேர், கம்ப்யூட்டர் பாதுகாப்பு. வைரஸ் `எழுத்தாளர்கள்' இந்த மூன்றையும் சொல்லி ஆசை காட்டித்தான் கம்ப்யூட்டர் பயனாளிகளை மோசம் செய்கிறார்கள்.

"என் படுக்கையறைக் காட்சிகளை இலவசமாகப் பாருங்கள்!" என்று ஒரு ஈ-மெயில் வரும். அல்லது "இந்த சாஃப்ட்வேரை டவுன்லோட் செய்யுங்கள்! இன்டர்நெட்டில் நீங்கள் விட்டுச் சென்ற தடயங்களை நீக்குங்கள்!" அல்லது "ஹலோ, இது மைக்ரோசாஃப்ட் அவுட்லுக்கின் லேட்டஸ்ட் அப்டேட். இதை இன்ஸ்டால் செய்தால் உங்கள் கம்ப்யூட்டர் பாதுகாப்பாக இருக்கும்" என்று உதவி செய்யப் பார்க்கும். . .

இப்படிப்பட்ட ஈ-மெயில்களை நம்பி அதில் இருக்கும் அட்டாச்மென்ட்களை க்ளிக் செய்து தொலைப்பவர்கள் பலர். இவர்கள் புண்ணியத்தில்தான் பல வைரஸ்களுக்கு உலகப் புகழ் கிடைக்கிறது. ஐலவ்யூ, மெலிஸா, அன்னா கோர்னிகோவா, சர்கேம் என்று ஆன்லைன், ஆஃப்லைன் உலகங்களை உலுக்கியெடுத்த வைரஸ்கள் எல்லாம் நம்மை ஏமாற்றித்தான் பரவின.

இந்த மாதிரி டிஜிட்டல் கிருமிகள் இப்போது ஈ-மெயில் மூலமாக மட்டுமில்லை, இன்ஸ்டன்ட் மெசேஜிங், இன்டர்நெட் ரிலே சாட் (ஐ.ஆர்.சி.) போன்ற மீடியங்கள் மூலமும் பரவத் தொடங்கியிருக்கின்றன.

அதாவது ஒரு கம்ப்யூட்டர் கிரிமினல் இன்டர்நெட் சேவை நிறுவன அதிகாரி என்ற போர்வையில் ஒரு அப்பாவி கம்ப்யூட்டர் பயனாளிக்கு ஃபோன் செய்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

அந்தப் பயனாளி அதை நம்பி அவனிடம் தன் ஃபோன் நம்பர், க்ரெடிட் கார்டு எண் போன்ற ரகசியத் தகவல்களைக் கொடுத்துவிட வாய்ப்பிருக்கிறது. இந்தத் தகவல்களை வைத்துக்கொண்டு அந்த கிரிமினல் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

Wednesday, March 12, 2008

அமெரிக்காவில் ஐ.டி வருவாய் பாதிப்பு

அமெரிக்கப் பொருளாதாரம் கடந்த ஓரிரு ஆண்டுகளாகவே மந்தமடைந்து வருகிறது.

இதனால் அந்த நாட்டை நம்பி இங்கு பிழைப்பு நடத்தும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் வருவாய் விகிதத்தில் குறிப்பிடத்தக்க அளவு மந்த நிலை பிரதிபலிக்கலாம் என்று இந்த துறையை சேர்ந்த கணிப்பாளர்கள் கூறியுள்ளனர்.

இதன் தாக்கம் எந்த அளவிற்கு இருக்கும் என்பதை துல்லியமாகக் கணிக்க முடியா விட்டாலும் முன்னணி நிறுவனங்களான டிசிஎஸ் மற்றும் இன்ஃபோசிஸ் போன்ற நிறுவனங்களின் 4ம் காலாண்டு வருவாயில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

டி.சி.எஸ் நிறுவனத்தின் 10 முன்னணி அமெரிக்க வாடிக்கையாளர்களில் இரண்டு நிறுவனங்கள் தங்கள் புரோஜெக்டுகளை தாமதப்படுத்தியுள்ளதாக தெரிகிறது. அதாவது இந்த இரண்டு நிறுவனங்களும் தங்களது தகவல் தொழில் நுட்ப செலவினங்களை தாமதப்படுத்துவதாக, டிசிஎஸ் தலைமை செயல்பாட்டு அதிகாரி சந்திரசேகரன் மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் தெரிவித்துள்ளார்.

டி.சி.எஸ் மட்டுமல்ல இன்னும் பல முன்னணி நிறுவனங்களுக்கு வந்து சேர வேண்டிய பணிகளும் தாமதப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் 2008ம் ஆண்டு ஐ.டி. நிறுவனங்களுக்கு அவ்வளவு லாபம் தரும் ஆண்டாக இருக்காது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்காவில் வங்கிகள் சப் பிரைம் என்ற அநாயச கடன் திருவிழாவை நடத்தி வருவதால் அதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக பல வங்கிகள் தங்களது தகவல் தொழில் நுட்ப பணிகளை நிறுத்தி வைத்துள்ளதாக தெரிகிறது.

Sunday, March 9, 2008

கணினி பராமரிப்பிற்கு 8 ஆலோசனைகள்

உங்கள் கணினிகளை சிறப்பான செயல்திறனுடன் பராமரிப்பாக வைத்திருக்க 8 வழிமுறைகள் பரிந்துரை செய்யப்படுகின்றன.

தற்போதைய ஐ.டி. உலகில், நம் அனைவருக்கும் ஏதோ ஒரு விதத்தில் கணினிதான் வாழ்க்கையாக அமைந்துள்ளது. கணினியில்தான் பெரும்பாலான நமது நேரம் செலவிடப்படுகிறது.

நிதி நடவடிக்கைகள் முதல் நமக்கு பிடித்த இசைகளை கேட்பது வரை அனைத்துமே கணினிவழிதான் நம்மில் பலர் செய்கிறோம். நண்பர்களிடம் உரையாடுகிறோம், மின்னஞ்சல்களை அவ்வப்போது பார்த்து பதில் அனுப்புகிறோம். இந்த நிலையில் கணினி வேலை செய்யாமல் போனால் என்ன ஆகும்?

நாம் கணினியில் தற்போது செய்து கொண்டிருக்கும் பணி காணாமல் போய் விடுகிறது. அல்லது நாம் சேமித்து வைத்டிருந்த தகவல்கள் எல்லாம் போய் விடுகிறது என்று வைத்துக் கொள்வோம். கணினியில் பணியாற்றும் அனைவருக்கும் தங்களது வாழ்நாளில் இந்த மாபெரும் சிக்கல் ஒரு நாளாவது ஏற்படும் என்பது வழக்கமாகி வருகிறது. இதுபோன்று திரும்பவும் நிகழாமல் இருக்க என்ன செய்வது?

இதுபோன்ற நிலையைத் தவிர்த்து, நம் கணினியைப் பேணிப் பராமரிக்க கீழ்க்கண்ட வழிமுறைகளை கடைபிடிக்கலாம்.

கணினிகளை சீரான இடைவெளியில் ஸ்கேன் செய்யவும்: வாரம் ஒரு முறை ஸ்கேன் டிஸ்க் கொண்டு கணினியை ஸ்கேன் செய்வது மிக முக்கியம். ஸ்கேன் செய்வதால் ஹார்ட் டிஸ்கில் உள்ள பிழைகள் சரி செய்யப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளவும்.

வைரஸ் ஒழிப்பு மென்பொருளை இன்ஸ்டால் செய்யவும்: எந்த ஒரு கணினியும் வேலை செய்யாமல் போகிறதா? அதற்கு முக்கியக் காரணம் வைரஸ் ஊடுருவலே. இதனால் சந்தைகளில் உள்ள வைரஸ் ஒழிப்பு மென்பொருட்களை நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் வாங்கி இன்ஸ்டால் செய்ய வேண்டும். அதேபோல் வைரஸ் ஸ்கேனிங் நடவடிக்கைகளை அவ்வப்போது மேற்கொள்வதும் அவசியம்.

சில வைரஸ் ஒழிப்பு மென்பொருட்கள் ஆன்லைனிலேயே கிடைக்கும். ஆனால் இவற்றை டவுன்லோடு செய்யும்போது அதிக எச்சரிக்கை தேவை. ஏனெனில் இந்த மென்பொருளே ஒரு வைரஸ் பரப்பும் உத்தியாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபயர் வால் இன்ஸ்டால் செய்யவும்: இணையதளங்களுக்கு அடிக்கடி செல்லும் பழக்கமுடையவரானால் ஃபயர்வால் இடுவது மிகவும் அவசியம். அதிகாரபூர்வமற்ற, தேவையற்ற விஷயங்கள் உங்கள் கணினிகளை ஊடுருவதிலிருந்து ஃபயர்வால் தடுக்கும். உங்கள் கணினிகளில் உங்களுக்கு தெரியாமலேயே டவுன்லோடு ஆகும் புரோகிராம்கள் குறித்து உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் திறமையான பணியும் ஃபயர்வாலுக்கு உண்டு.

தெரியாமல் "டிலீட்" பொத்தானை அழுத்தி விட்டீர்களா?

கணினியில் உள்ள கோப்புகளை தெரியாமல் நீக்கி விட்டீர்களா? கவலை வேண்டாம். இழந்த கோப்புகளையும், ஆவணங்களையும் மீட்டெடுக்கலாம்.

நீங்கள் எம்.எஸ். வேர்டில் ஒரு ஆவணத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். தெரியாமல் அதனை "டிலீட்" செய்து விடுகிறீர்கள் என்றால், உங்கள் புரோஜெக்ட் லீடரிடம் தெரிவிக்க முடியாது. அதற்காக கவலை வேண்டாம், ஃபைன் ரெகவரி என்ற சாஃப்ட்வேர் மூலம் நீக்கியதை மீட்டெடுக்க முடியும்.

உங்கள் கணினியின் ஹார்டு ட்ரைவிலிருந்து நீக்கிய கோப்புகளை இந்த ஃபைன் ரெகவரி மென்பொருள் திரும்பவும் உங்களுக்கு மீட்டெடுத்துக் கொடுக்கும். இது இலவச மென்பொருள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மென்பொருள் இணைய தளத்தில் கிடைக்கிறது. அதனை டவுன்லோடு செய்து கொள்ளலாம். டவுன்லோடு செய்வதற்கு நாம் கட்டணம் கொடுக்க வேண்டும். ஆனால் ஃபைன் ரெகவரி மென்பொருளுக்கு காசு கொடுக்க வேண்டியதில்லை.

நாம் கோப்புகளை நீக்கும்போதோ அல்லது அழிக்கும்போதோ, விண்டோஸ் அதனை முழுதும் ஒழித்து மூடி விடுவதில்லை. மாறாக டிரைவில் அதனை மறைத்து வைத்திருக்கும். ஃபைன் ரெகவரி மென்பொருள் உங்கள் கணினியை முழுதும் ஸ்கேன் செய்து நீங்கள் நீக்கியதாக நினைத்து அஞ்சிய கோப்புகளை உங்கள் கண் முன் கொண்டு வந்து நிறுத்தும்.

-Thanks : msn

Monday, March 3, 2008

தங்கம் விலையில் மீண்டும் புதிய உச்சம்

சர்வதேச சந்தையில் இன்று ஏற்பட்ட உயர்வு காரணமாக தங்கத்தின் விலை இன்று மீண்டும் புதிய உச்சத்தை எட்டியது.

சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 959 அமெரிக்க டாலராக உயர்ந்த நிலையில், ஆசிய சந்தையிலும் தங்கத்திற்கான தேவைப்பாடு இன்று மிக அதிகமாக காணப்பட்டது.

இதன் எதிரொலியாக மும்பை மற்றும் சென்னை சந்தைகளில் தங்கத்தின் விலை இன்று காலை வர்த்தகம் தொடங்குபோதே 10 கிராமுக்கு முறையே ரூ. 12, 290 மற்றும் ரூ. 12, 245 ஆக காணப்பட்டது.

பின்னர் இதுவரை இல்லாத அளவிற்கு 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 12, 415 என்ற புதிய உச்சத்தை எட்டியது.

(மூலம் - வெப்துனியா)

தங்கம் விலையில் மீண்டும் புதிய உச்சம்

சர்வதேச சந்தையில் இன்று ஏற்பட்ட உயர்வு காரணமாக தங்கத்தின் விலை இன்று மீண்டும் புதிய உச்சத்தை எட்டியது.

சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 959 அமெரிக்க டாலராக உயர்ந்த நிலையில், ஆசிய சந்தையிலும் தங்கத்திற்கான தேவைப்பாடு இன்று மிக அதிகமாக காணப்பட்டது.

இதன் எதிரொலியாக மும்பை மற்றும் சென்னை சந்தைகளில் தங்கத்தின் விலை இன்று காலை வர்த்தகம் தொடங்குபோதே 10 கிராமுக்கு முறையே ரூ. 12, 290 மற்றும் ரூ. 12, 245 ஆக காணப்பட்டது.

பின்னர் இதுவரை இல்லாத அளவிற்கு 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 12, 415 என்ற புதிய உச்சத்தை எட்டியது.

(மூலம் - வெப்துனியா)

Monday, February 25, 2008