Tuesday, April 29, 2008

விரைவில் வருகிறது பேசும் கம்ப்யூட்டர்

மனிதர்களுடன் நேரடியாகப் பேசக்கூடிய புதிய கம்ப்யூட்டர்கள் விரைவில் வெளிவர உள்ளன.
மனிதர்களின் குரல் ஏற்றஇறக்கங்கள், முகபாவனைகளை உணர்ந்து அதற்கேற்ப சிக்னல்களின் அடிப்படையில் விஞ்ஞானிகள் பேசும் கணினிகளை உருவாக்கி வருவதாக தெரிய வந்துள்ளது.
பெல்பாஸ்ட் நகரில் குயின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் சென்சிடிவிவ் ஆர்டிபிசியல் லிசனர் சிஸ்டம் என்ற பெயரில் இந்த கணினியை வடிவமைத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய திட்டமான சீமெய்ன்-ன் ஒரு பகுதியாக இந்த பேசும் கணினி உருவாக்கப்படுகிறது.
குரல், முகபாவனைகளுக்கு ஏற்ப அந்தக் கணினி சம்பந்தப்பட்ட நபருடன் விவாதத்தில் ஈடுபடும். கணினி பயனரின் பல்வேறு நடத்தைகளுக்கு ஏற்ப அந்தக் கணினி செயலாற்றும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு பரிமாணங்களில் நாம் பேசுவது, எந்தமாதிரியான பேச்சுகள் சுவாரசியமானவை, எவை அலுப்புத் தட்டுபவை போன்ற அனைத்து பாவனைகளும் கணினி உணர்ந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்படுவதாகத் தெரிகிறது.